குணாளினி தயானந்தன் அவர்களின் அரசியல் ஆய்வுக் களத்துக்கான கருத்துரை !

திரு முல்லைமோகன் அவர்களும் திரு தேவராசா அவர்களும்
பங்கேற்றிருந்த அரசியல் ஆய்வுக் களம் ஒன்றினை கடந்த
07/05/2022 அன்று பார்க்கக் கிடைத்தது.
அதில் அலசப்பட்ட விடயங்கள் மனம் சிலிர்க்க வைத்தது.
கிட்டத்தட்ட இலங்கையின் முழுமையாக அரசியல் பரப்பில்
பயணித்து, எதிர்காலத்தை மிகச் சரியாகக் கணித்துச் சொல்வது
போல ஒரு விறுவிறுப்பான நேர்காணலாக அது அமைந்திருந்தது.
அவற்றில் திரு முல்லைமோகன் அவர்களின் பரந்த உலக
வரலாற்று அவதானிப்புக்களுடனான சில எதிர்வு கூறல்கள் நமது
நாட்டில் மறுநா‌ளே நடக்கத் தொடங்கியிருந்தன.
நேர்காணலின் ஆழமும் அகலமும் நீட்சியும் விரிவும் வியக்க
வைத்தன. கேள்விகளுக்கு ஏற்ற பதில்கள். பதில்களுக்கு ஏற்ற
தொடர் கேள்விகள்.மிகவும் அருமையாக, அற்புதமாக ,
உயிர்த்துடிப்போடு அமைந்திருந்தது. சமூகத்தில் பல தளங்களில்
இந்நிகழ்ச்சி விளக்கேற்றி வைக்கும் என நம்புகிறேன். இருவருக்கும்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

குணாளினி தயானந்தன் லண்டன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert