எம்தேசக் கவிஞர்களுக்கு STS தொலைக்காட்சி ஊடாகச் சந்தர்ப்பம் அளிப்பது மகிழ்வைத்தருகின்றது
. இரா . சம்பந்தன்

திருமதி கீதா ரவி அவர்கள்புதுக்கவிதைகளில் ஆழுமைமிக்க கவிஞராகத் திகழ்கின்றார் !அவரின் ஒவ்வொரு கவிதைகளும் மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளாய்வாழ்வியலைச் சுட்டி நிற்கின்றன ! சொற்கள் சுதந்திரமாகச் சிறகுகள்விரிக்கின்றன . மிகமிக இயற்கையை நேசிப்பவராகவும் , கவிதை வரிகளில்தேவையில்லாத அடுக்குவசனங்களை எழுதாமல் அர்த்தமுள்ள கருத்துகளைஉள்ளடக்கி தனது மனவுணர்வுகளையும் சேர்த்து சிறப்பான கவிதைகளையாத்தளித் திருக்கின்றார் . அவருக்கு எமது பாராட்டுகள் . எம்தேசக் கவிஞர்களுக்கு s t s தொலைக்காட்சி ஊடாகச் சந்தர்ப்பம் அளிக்கும்இசையமைப்பாளரும் , கவிஞரும் , அத்தொலைக்காட்சியின் நிறுவனருமானதிரு …

கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் அவர்களின் செல்வி வர்ணி அவர்களின் கவிதைபற்றிய சிறப்புக்கருத்து !

தாயகத்திலிருந்து கவிஞர்கள் தரும்கவிதா நிகழ்வில் கலந்து கொண்டசெல்வி வர்ணி சச்சிதானந்தம்அவர்கள் மிகச்சிறப்பாகஉணர்வுபூர்வமாக கவிதைகளையாத்தளித்திருந்தார். நாடி நரம்புகளில் சுத்தக் குருதிஏறிநடந்து உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பது போல்அவருடைய கவிதைகள் சமூகத்திற்கு நன்மை பயக்கும்.அவருக்கு எமது நெஞ்சார்ந்தவாழ்த்துகள் இன்நிகழ்வின் தொகுபாளர் இசையமைப்பாளர், STS தமிழ் தொலைக்காட்சி இயக்குனர், கவிஞர் எஸ்.தேவராசா அவர்களின் தொகுப்புக்கும் இன் நிகழ்வின் சிறப்புக்கும்வாழ்த்துக்கள் கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் யேர்மனிஅன்புடன் இரா. சம்பந்தன்