STS தமிழ் தொலைக்காட்சியே உன்னை வாழ்த்தி ஓர்கவிதை!

STS தமிழ் என்ற பெயரோடு
ஊடகமாய் விளங்கும்
உன்னை மனதார வாழ்த்துகின்றேன்!

ஆற்றலும் திறமையும்
அனைவரையும்
இணைக்கும் பண்பும்
அன்பும் நிறைந்தவர்களால்
ஓயாது கடமையாற்றும்
உன்பணிக்கு என் வாழ்த்துக்கள்!

உலகெங்கும் நடப்பவையாவும்
உடன் அறிந்தும் காணவைப்பாய்
கலைஞர்களின் திறன் அறிந்து
அவர்களை உலகறியச்செய்தாய்
உன்பணிக்கு என் வாழ்த்துக்கள்!

அரசியல்,சினிமா பொழுதுபோக்கு
சமூகசிந்தனை மருத்துவம்
என்றே உன்பணி அழப்பெரியது!

கதைகள்,கட்டுரைகள்,பாடல்கள்
தேடல்கள்,நாடகங்கள்,
நம்மவர் திரைப்படங்கள்
தனித்துவம் காட்டும் உன் சேவைகள்!

கலைஞர்கள் சங்கமம்
பெண்ணேநீ பேசவா
பட்டிமன்றங்கள்
பயன் உள்ள உன் நிகழ்வுகளுடன்
நேரலைகள் என்று அளப்பெரும் சேவையாற்றும்
உன்பணியை எப்படிச்சொல்வது!

தெளிவான தொழில் நுட்ப்பத்தில்
தரமான காட்சியோடு
அழகோடு வலம்வரும் ஊடகமே
உன்பணிக்கு தலைசாய்க்கின்றேன்
உன்பணிக்கு என் வாழ்த்துக்கள்!

கலைஞர்களின் திறமைக்கு
சான்றிதழும்,கெளரவங்களும்
கொடுத்து ஊக்கமளிக்கும்
உன்பண்பு போற்றுதற்க்குரியது!

அனுபவம் வாழ்ந்தவர்களின்
கரங்களினால் உன்சேவை
பல்லாண்டு தொடர்கின்றது
என்னையும் உன்பக்கத்தில்
இணைத்து புகழும் பெயரும்
பெருமையும் தேடித்தந்தாய்
உண்மை வெல்லும்
உண்மையான உழைப்பு உறுதியாகும்
உன்சேவை தொடரட்டும்
ஊடகமே உன்னை உலகம் போற்றட்டும் !

கவிஞர் மயிலை யூர் இந்திரன் (பல்துறைக்கலைஞர் பிரான்ஸ்)