எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒர் புதிய நிகழ்ச்சி வாசிப்போம் வாரம் ஒரு கதை

எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒர் புதிய நிகழ்ச்சி பற்றிய கலந்துரையாடல் இதில் இணைந்துள்ளோர் முல்லைமோகன், திருமதி குணாளினி தாயாநந்தன், திருமதி வாணி கலாபன் , எஸ்.தேவராசா,ஈழத்தமிர்களின் படைப்பை தன் அகம் கொண்டு செயலாற்றி வருகின்ற இத்தொலைக்காட்சி எம்மவர்கலைக்கும் படைப்புகளும் தனிக்களத்துடன் செயலாற்றி வருவதுடன் எமது படைப்பாளர்களின் படைப்புகளுக்கும் புதிய புதிய களம் அமைத்து பல நிகழ்வுகளை எடுத்தவருவது நீங்கள் அறிந்ததே

அந்தவகையில் கடந்த எட்டுமாத முயற்றியில் திருமதி குணாளினி தாயாநந்தன் திருமதி வாணி கலாபன் அவர்கள் இணைவால் நாம் இணைந்து தரும் நிகழ்ச்சிதான் வாசிப்போம் வாரம் ஒரு கதை நிகழ்ச்சி

இது முளுமையாக எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்துவரும் நிகழ்வு இன் நிகழ்ச்சி மிகவிரைவில் உங்கள் பார்வைக்காக உங்கள் வருகின்றது இதில் இருவர் தனித்துவ ஆளுமையுடன் கதை சொல்லியுள்ளார்கள் அவர்கள் தான் திருமதி குணாளினி தாயாநந்தன் திருமதி வாணி கலாபன்

இன்நிகழ்வில் உங்கள் படைப்புக்களும் வர விருப்பும் எம் ஈழத்து படைப்பாளர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் படைப்பும் ஒளி ஒலி வடிவாகும்

காலத்தால் அழியாத படைப்பாக தொலைக்காட்சி யூரூப் என உங்கள் படைப்பு பதிவாகும்

கலையோடு இணைவோம் கவசமாக ஈழவர் நாங்கள் எமது படைப்க்புகளை எமது சந்ததிக்கு எடுத்துரைப்போம் ,எமது துயரங்களை ,தாய் மண் வரலாறுகளை, வாழ்கை முறைகளை, இதுவே நாம் எம் இனத்திற்கு செய்யும் மாபெரும் கடமை வராலாறு இல்லாதவன் வாழ்நாள் காலத்தில் மறைந்து போகிறான் மறந்து போகப்படுகிறான் இதை உணர்ந்து கலைப்பொக்கிசங்களை பதிவாக்க நல்ல களம் நல்லதளம் இணைவோம் ஈழவர் கலைவளர அதில் தமிழ் இனம் தலை நிமீர