சிறுப்பிட்டி மக்கள் எல்லாம்

சிறுப்பிட்டி மண்ணில் பிறந்த நான் எனது கலைப்பணியில் எனது ஊருக்கான பாடல் இசைத்தென்றல் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ்-தேவராசா ஆகிய எனது இசையில் ஆக்கத்தில் என்னுடன் இணைந்து கந்தக்குரலோன் கானமணி கணேஸ் அவர்கள் பாடியுள்ளார்கள் .பாடல் எனது கவியில் முக்கவிஞர்கள் கருத்துடன் உருவானது. ஊரின் சிறப்புக்காய் உருவான பாடலென பல ஊர் மக்கள் கருத்தளித்த பாடல் .இது போல் எம் ஊர் மக்கள் திசை பேதம் இன்றி இணையும் காலமே எனது பாடல் சிறப்பு பெறும் .அந்தக்காலம் வருமா, …

எஸ் ரி எஸ் ஒளியகத்தில் உருவான நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையாருக்கான பாடல்

நண்பர் நவற்கிரி தேவன்ராஜ் சுவிசில் இருந்து யேர்மன் வந்தபோது எஸ் ரி எஸ் ஒளியகத்தில் அவர் கேட்டுக்கொண்டதற்கு இனங்க உருவான பாடல் இதை எழுதி இசையமைத்து எஸ் தேவராசா பாட இணையாக தேவன்ராஜ் தேவிதா தேவராசா தேனுகா தேவராசா தேவதி தேவராசா பாடியுள்ளனர் இது ஒரு எஸ் ரி எஸ் தயாரிப்பு

பாடுவோர் பாடவரலாம் குறும் தொகுப்பு

மிக விரைவைில் புதிய நிகழ்வாக எம்மவர் பாடல்களை தொகுத்து பாடுவோர் பாடவரலாம் எனும் நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சி ஆரம்பிக்கின்றது .அதற்கான குறும் தொகுப்பு இணைக்கப்படுகின்றது .உங்களிடம் இருக்கும் கறோக்கை அல்லது இயற்றிய பாடல்கள் த‌ரமான ஒளிப்பதிவு ஒலிப்பதிவுடன் தரும் பட்சத்தில் உங்கள் பாடலும் இணைக்கப்படும். STS தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினர்