கவிதை: எஸ் ரி எஸ் வாழிகவிஞர் உடுவிலூர் கலா !


எஸ் ரி எஸ் வாழி !

எஸ்.ரி.எஸ் என்னும்
தொலைக் காட்சியே

எங்கும் உந்தன்
எழிலான பயணம்

தாயகத்து உறவுகளைத்
தாங்கியே நீயும்

ஓயாது தொடர்கிறாய்
ஒய்யார சேவையாய்

கவிஞர்கள் தரும் கவிதை நிகழ்விலே

கவிஞராய் நானும்
களமே கினேனே

புலம்பெயர் தேசங்களில்
புன்னகைக்கும் எம்முறவுகள்

புலமையொடு எம்மையும்
கண்டு மகிழ்ந்திட

களமது தந்த
கற்பகச் சோலையே

உந்தன் அரங்கினில்
எந்தன் கவிதைகள்

உலவியே அசைந்தது
உவகையுற்றேன் நானுமே

முத்தான உன்பணியும்
மூன்றுபாகங்களில்

தித்திப்பாய்த் தொடர்ந்தது
தீஞ்சுவைத் தமிழோடு

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

நன்றியே உந்தனுக்கு
நாவாலே என்றும்

வாழி நீயே
வாழி வாழி

வண்ணத் தமிழோடு
வனப்புடன் வாழி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert